தூக்கம் என்பது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் ஓடிக் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!. அதுபோலத்தான் தூக்கமும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.
நடுத்தர வயதுப் பெண்கள்
நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.
50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.
இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதயக் கோளாறு
ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.
எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.
நடுத்தர வயதுப் பெண்கள்
நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.
50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.
இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதயக் கோளாறு
ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.
எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நான் தட்ஸ் தமிழில் வாசித்தேன் அதை தங்களோடு: பகிர்ந்துக் கொள்கிறேன்.
தூக்கம் கூட கொல்லும்...
ReplyDeleteநல்ல பயனுள்ள செய்தி
தகுந்த அளவு சாப்பிடவேண்டும் .........தகுந்த அளவு தூங்கவேண்டும் .....
ReplyDeleteதூங்கனாலும் திட்றீங்க, சீரியல் பார்த்தாலும் திட்றீங்க பாவம்யா அவுங்க என்ன பண்ணுவாங்க ஹி ஹி
ReplyDelete//50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.//
ReplyDeleteஅப்ப 50 வயசுக்கு கீழ இருக்கறவங்க நிறைய நேரம் தூங்கலாமா #டவுட்டு
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதூக்கத்தைல் கூட இவ்வளவு பிரச்சினையா/
ReplyDeletePayanulla pagirvu
ReplyDelete////////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
தூக்கம் கூட கொல்லும்...
நல்ல பயனுள்ள செய்தி
///////////
வாங்க ரமேஷ்...
//////
ReplyDeletekoodal bala said...
தகுந்த அளவு சாப்பிடவேண்டும் .........தகுந்த அளவு தூங்கவேண்டும் .....//////
அளவுக்கு மீறாமல் இருந்தால் அத்தனையும் அழகுதான்...
//////
ReplyDeleteசசிகுமார் said...
தூங்கனாலும் திட்றீங்க, சீரியல் பார்த்தாலும் திட்றீங்க பாவம்யா அவுங்க என்ன பண்ணுவாங்க ஹி ஹி/////
அது அப்படித்தாங்க..
எதுவும் செய்யாம இருந்தாலும் திட்டுவோம்..
நல்ல பகிர்வு
ReplyDeleteபெண்களைத் தூங்க விட மாட்டீங்களே,பாவம்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மாப்ள!
ReplyDeleteஅருமையான கருத்து நண்பரே
ReplyDeleteமயில் தொகையே ஆனாலும் அளவுக்கு மீறி ஏற்றினால்
வண்டியின் அச்சு முறியும் என்ற வள்ளுவன் வாக்குப்படி
மிகினும் குறையினும் பாதிப்பே எதிலும்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
thulithuliyaai.blogspot.com
பகல்ல தூக்குறதே பொழப்பு
ReplyDeleteபலரின் தூக்கத்தை கெடுத்த , தடுத்த பதிவு
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு நண்பரே ...........
நன்றி
பயனுள்ள தகவல்,
ReplyDeleteபயனுள்ள தகவல். . .
ReplyDeleteஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்
ReplyDeleteஎனபதற்கு சரியான உதாரணம்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
நன்றி!
ReplyDelete///////
ReplyDeleteமதுரன் said... [Reply to comment]
தூக்கத்தைல் கூட இவ்வளவு பிரச்சினையா/
///////
உலகத்தில் இருக்கும் அத்தனையும் பிரச்சனைக்குரிய விஷயம்தான்...
thoongu moonchi pengale iniyaavathu pin thoongi mun eluveer ,,,,,ha ha ha
ReplyDeletegood post friend ...
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே
ReplyDeleteநல்ல பதிவு........
ReplyDeleteநல்ல பதிவு இப்போது எல்லாம் எங்கள் தூக்கம் களவாடப்பட்டுவிட்டது நண்பா!
ReplyDeleteஅருமையான நல்லதொரு தகவல்.
ReplyDeleteஆனா யார்க்கிட்டயும் சொல்லாதீங்க
இந்த பதிவு போடுற நோய் வந்ததில இருந்து நான் இரண்டுமணிநேரம் தூங்குவதும் அரிது....ஹி ...ஹி...ஹி...
நன்றி சகோ பகிர்வுக்கு.
நல்ல பயனுள்ள தகவல் சகோ
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. அதென்ன தூங்கினா பெண்களுக்கு மட்டும் நோய் வரும்? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை என்று யாராவது கொடிய தூக்கிட்டு வந்துட போறாங்க... ஏதோ நம்மால முடிஞ்சது.
ReplyDeleteஇதை மைக் போட்டு சொல்லணும். அப்ப தான் இந்த பொண்ணுங்க திருந்துவாங்க.
ReplyDeleteஅளவற்ற தூக்கம் ஆயுளை கொல்லும் என்பதை உங்கள் பதிவில் உணர்ந்தேன்
ReplyDeleteஅளவான தூக்கம் போதுமானதே. அதிக தூக்கம் துக்கத்தில் முடியும் என்று சொல்லூங்கள்
ReplyDeleteநல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
ReplyDeleteஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
raittu ரைட்டு
ReplyDeleteநல்ல பகிர்வு, பெண்களுக்கு இயல்பாவே ஆண்களை விட தூக்கம் குறைவுதான்...
ReplyDeleteநல்லதொரு தகவல்!
ReplyDeleteநல்ல பதிவுதான்.பெண்களை தூங்கவும் விட மாட்டீங்க,உங்களுக்கு வேண்டிய நேரங்களில். எழிலன்
ReplyDeleteஉடல் நலங்காண இது போன்ற
ReplyDeleteகட்டுரைகள் தேவை இவ்வாறு
வெளியிடுவது நல்லதொரு சமூக
சேவை என்றே நான் கருதுகிறேன்
மேலும் தொடர விரும்புகிறேன்
புலவர் சா இராமாநுசம்
உங்கள் பதிவிற்கு நன்றிகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் அக்கறைக்கு,,,
!!!ஆகா இனி நித்திரையே கொள்ள மாடேன்,,hahahaha
இதைத்தானோ நம் பெரியவர்கள் பெண்கள் பின் தூங்கி முன் எழுவது நல்லது என்றார்கள் !
ReplyDeleteதூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை இனி ததூங்காதே பாப்பா தூங்காதேன்னு பாட வேண்டியதுதான்
ReplyDeleteவணக்கம் பாஸ், தூக்கம் பற்றி நாம் படித்து, உணர்ந்து விழிப்படைய வேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள் அடங்கிய பதிவினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDelete