கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 September, 2013

காமம் பேசும் ஓவியங்களும்...! காதல் பேசும் மொழிகளும்...!




ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!

****************************************************


எத்தனை பூக்கள் சூடினாலும்
உன்னால் தான் அழகு
அவைகளுக்கு..!

****************************************************


பூகம்பங்களுக்கிடையே
நீ பூத்தாலும்
என் கவிதைகளில்
உனக்கு இடமுன்டு...!

****************************************************


கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
இவளை அனுப்பியிருந்தால்
நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!

****************************************************



எனக்கு எப்போதும் பயமில்லை... 
வலிக்கு பயந்திருந்தால் 
நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
 
****************************************************



என்ன ‌அதிசயம் 
உன் பெயரை உச்சரிக்கும்போதே 
உதடுகள் இனிக்கிறது..!

****************************************************


மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே... 
உன் மௌனங்களையெல்லாம் 
மொழி பெயர்க்கும் அகராதி 
என்னிடம் மட்டுமே உள்ளது...!

***************************************************


காகிதத்தில் 
நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
 
மையாக
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
 
****************************************************


எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!

***************************************************


 
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

**********************************************



எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!

***********************************************


யாருக்கும் தெரியாமல்
ஒவ்‌வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
 
******************************************
காமம் பேசும் அழகிய ஓவியங்ளோடு
காதல்பேசும் என் கவிதை வரிகள்.. (மீள்பதிவு)

12 comments:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete


  2. உங்களுக்கு மீள்பதிவு ஆனால் எனக்கு புத்தம் புதிய பதிவு குறுங்கவிதைகள் அருமை

    ReplyDelete
  3. கவிதைகள் அருமை...
    படங்கள் இங்கு தெரியவில்லை...

    ReplyDelete

  4. இனிமேல் நீ தரும்
    தண்டனைகள் எல்லாம்
    முத்தங்களாகவே இருக்கட்டும்....!
    >>
    பேராசைதான்!!

    ReplyDelete
  5. அருமையான காதல் குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான கவிதை + புகைப்படங்கள்!

    ReplyDelete
  7. அருமையான வரிகள்.. அத்துடன் ஒத்திசையும் அழகான படங்கள்.. பகிர்வினிற்கு நன்றி.!

    ReplyDelete
  8. காதல் பொழிகின்றது.

    ReplyDelete
  9. கவிதை நன்றாகவுள்ளன கவிஞரே.

    என்னை மிகவும் கவர்ந்த வரிகள்..

    காகிதத்தில்
    நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....

    மையாக
    கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!

    ReplyDelete
  10. காகிதத்தில்
    நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....

    மையாக
    கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
    மிக மிக ரசித்தேன்... அனைத்தும் அருமையான காதல் கவிதைகள்...

    ReplyDelete
  11. அதென்ன எல்லாம் வெள்ளைக்காரி புகைப்படமாக இருக்குது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...