கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 November, 2010

தூங்க முடியுமா?



”அமைதிய இருக்கணும்னு ஆசைப்பட‌றேன்... அது முடியலே சார் என்னா‌லே!”
”ஏன்?”
”நான் குடியிருக்கிற இடம் அப்படி!”
“என்ன பிரச்சனை அங்‌கே?”
:ஒலி பெருக்கிகள் போடற சத்தம் தாங்க முடியலே!”
”அதிகமான சத்தம் காதுலே விழறது ஆபத்து... அது தெரியுமா உங்களுக்கு?”
”என்ன ‌சொல்றீங்க”
”நான் சொல்லலே... அது சம்மந்தமான நிபுணர்கள் சொல்றாங்க அப்படி!”
ஆராய்ச்சிக் கூடத்திலே விலங்குகளை வச்சி சோதிச்சுப் பார்த்தாங்களாம்... அளவுக்கு மீறிய சத்தம் உடம்புலே கொல
ஸ்டிரால் அளவை  அதிகரிச்சுதாம்... அது இதய தாக்குதல் வாய்ப்பை உண்டாக்குச்சாம்!
“விலங்குகளுக்கு தானே அப்படி?“
மனிதர்களையும் 100 டெசிபல் அளவு சத்தத்தைக் ‌கேட்கவச்சுப் பார்த்தாங்களாம்... அவங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுச்சாம்!
“ரொம்ப வேதனைதான்!“
நானும் தூங்கறதுக்கு எவ்வள‌வோ வழிகள்லே முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்... முடியலே..!
“நான் ஒரு வழி சொல்றேன்... பாருங்களேன்!“
என்ன வழி அது?
“படுக்கையிலே விழுந்தவுடனே கண்ணை மூடிக்கிட்டு ஒண்ணு, இரண்டு, மூணு,  நாலு... ன்னு வரிசையா சொல்லிக்கிட்டே வரணும்..!“
நேத்தி கூட... அதைத்தான் செஞ்சு பார்த்தேன்... முப்பதாயிரத்து முன்னூற்றுப் பதினேழு வரைக்கும் தான் எண்ண முடிஞ்சது...!
 

“அப்புறம் தூக்கம் வந்துட்டுதா?“
 

இல்லை... விடிஞ்சுட்டுது...!

 
நன்றி: தென்கச்சி கோ சுவாமிநாதன்

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...