கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 November, 2010

அ வரிசை பழமொழிகள்

* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
* அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்  திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
* அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
* அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
* அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
* அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
* அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறச் செட்டு முழு நட்டம்.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அற்றது பற்றெனில் உற்றது வீடு.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
* அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...