கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 November, 2010

கா வரிசை பழமொழிகள்

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
 * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
 * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
 * காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
 * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
 * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
 * காணி ஆசை கோடி கேடு.
 * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
 * காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
 * காப்பு சொல்லும் கை மெலிவை.
 * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
 * காய்த்த மரம் கல் அடிபடும்.
 * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
 * காரண குருவே காரிய குரு!
 * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
 * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
 * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
 * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
 * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
 * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
 * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
 * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
 * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
 * காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
 * காற்றில்லாமல் தூசி பறக்குமா?
 * காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
 * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...