கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 November, 2010

ஆ வரிசை பழமொழிகள்

* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* ஆசை வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடிப் பட்டம் தேடி விதை.
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
* ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...