கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 November, 2012

தினமலரில் அரசு செய்தியும், அதிர வைத்த கருத்துக்களும்.


 //////////// தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ////////// என்று தினமலரில் ஒரு ‌அரசின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது...


அந்த செய்தியை படித்த நான், அந்த செய்தியில் வாசகர்கள் தந்த சில கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்...

அவைகள் சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும், சுவாரஸ்யமாக இருந்தது அவைகளில் நான் ரசித்தவைகள் மட்டும் கீழே....

//////////s.maria alphonse pandian - chennai , இந்தியா
04-நவ-201211:11:03 IST Report Abuse
s.maria alphonse pandian எதற்கெடுத்தாலும் புரட்சி தலைவியை குறை சொல்வதெற்கென்றே ஒரு கூட்டம்....தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டாலும் தடையில்லா மது வழங்குகிறாரே...அதை பாராட்டலாமே? கல் நெஞ்சுகாரர்கள் ...///////////////

//////p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
04-நவ-201210:49:43 IST Report Abuse
p.manimaran சீக்கிரம் குடிச்சிட்டு சாவுங்கடா?? நாட்டில் மக்கள் தொகை குறையட்டும்.  ////////////

7malai - Chennai,இந்தியா
04-நவ-201209:46:21 IST Report Abuse
7malai பிள்ளைகளுக்கு 13 வகை உணவு வழங்கவேண்டுமானால் அப்பனிடம் இப்படி காசைப்பிடுங்கிதானே ஆகவேண்டும்.



AyyalurMagideshwaran - Muscat,ஓமன்
04-நவ-201209:15:00 IST Report Abuse
AyyalurMagideshwaran குடிச்சி குடிச்சி குடலெல்லாம் அரிச்சு, சந்துலயும் சகதிலயும் சாஞ்சு கெடந்து, மான மருவாதியெல்லாம் எழந்து, முடிவெடுக்க முடியாதபடி மூளையும் ஒருநாள் மக்கிப்போய் நீ சாகக்கிடக்க ரெண்டு நாளைக்கி முன்னாடியே தேர்தல் வரும்... அப்பவும் கூட நன்றிக்கடனா மீண்டும் இதே ஆட்சிக்கு ஓட்டுபோட்டுட்டு செத்துப்போவாயடா ஞானக்குடிமகனே...


SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
04-நவ-201208:41:00 IST Report Abuse
SENTHIL KUMAR (தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது) வாவ் சூப்பர்.. இது ஒரு நல்ல இலக்கு உங்கள் இலக்கு நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.ஓட்டு போட்ட குடிமக்களின் ஆசையை நிறைவேத்தும் முதல்வர் அம்மா அவர்களே நீர் வாழ்க. 


arun kumar - UK,யுனைடெட் கிங்டம்
04-நவ-201208:10:11 IST Report Abuse
arun kumar ஜனநாயகக் கடமையாற்ற வாரீர் குடிமகன்களே ...




s.maria alphonse pandian - chennai ,இந்தியா
04-நவ-201206:44:25 IST Report Abuse
s.maria alphonse pandian நல்ல வேலை...காந்தி பிறந்த நாளன்று கடைகளை மூட மத்திய அரசின் ஆணை உள்ளது...இல்லாவிட்டால் அன்றைக்கும் 125 கோடிக்கான இலக்கை நிர்ணயித்திருப்பார்கள்...இந்த "டாஸ்மாக்" ஆட்சியாளர்கள்...


"Karuthu" KANDASAMY - Singapore,சிங்கப்பூர்
04-நவ-201206:23:06 IST Report Abuse
தமிழனை தப்பவிடகூடதுன்னு "target" வச்சு அடிக்கிறான்யா..... ஆஹாஆ

saravanan - Tuas South Ave 06,சிங்கப்பூர்
04-நவ-201206:09:42 IST Report Abuse
saravanan இதுவும் அம்மாவின் ஓராண்டு சாதனையோ? தடையில்லா மின்சாரம் கேட்டா,நீங்க தடையில்லா மதுபானம் கொடுக்குறீங்க பெருமையா இருக்கு.குடிப்பவனை யாராலும் திருத்த முடியாது,குறைந்ததது அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுக்காமல் இருந்தால் போதும்.நீங்க செய்ற இந்த சாதனை இன்னும் பல குடிமகன்களை தமிழ்நாட்டுக்கு பெற்று தரும் என்பது என் கருத்து
ammaiyatimai - chennai,இந்தியா
04-நவ-201205:58:45 IST Report Abuse
ammaiyatimai அண்டா குண்டானவ அடகு வச்சு பத்தல பத்தல பத்தல மப்பு பத்தல. போத இறங்கி போச்சு பைத்தியம் புடிச்சி போச்சி என்ன செய்ய இப்ப......... அம்மா ஆயியம்மா விலையில்லா ஒரு கட்டிங் குடும்மா.................ஓம் கிரீம் கிலீம் மிடாஸ் ச்வாஹா..........புத்தி கெட்ட தமிழன் மரண குழிக்கு போஹா....

லாடு லபக்கு தாஸ்... - லாடு லபக்கூர், இந்தியா
04-நவ-201201:45:38 IST Report Abuse
லாடு லபக்கு தாஸ்... தீபாவளியன்று "சரக்கு&39 விற்பனை இலக்கு ரூ.125 கோடி என்பது போதுமானதாக இல்லை../// மேலும் முயற்சி செய்தால் 250 கோடி இலக்கை எளிதாக அடையலாம்..//

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:08:56 IST Report Abuse
tamil Selvan எல்லா மக்களுக்கும் விலையில்லா குவார்ட்டர் கொடுத்தா மின்சாரம் இல்லா நேரத்தில் கொசு கடி தெரியாமல் தூங்கலாம்,அரசின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கவே மின்வெட்டை அமல் படுத்துகிறார்கள். 

tamil Selvan - chennai,இந்தியா
04-நவ-201201:03:17 IST Report Abuse
tamil Selvan தமிழ்நாட்டில் எது தட்டுப்பாடு வந்தாலும் இவர்களுடைய மிடாஸ் கம்பெனி சரக்குக்கு மட்டும் தட்டுப்பாடே வராது.தீபாவளி வருது பிறகு கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பொங்கல் எல்லாம் வருது என்ஜாய் பண்ணுங்க மக்கா.


தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-நவ-201202:57:28 IST Report Abuse
தமிழவேல் ஆனா சரக்கு தரலைன்னா குடிமகன்க கிட்டேருந்து 70 கோடி கறக்க முடியாது......

Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
04-நவ-201203:18:46 IST Report Abuse
Sentamil karthikஒழுங்கான நிர்வாகம் கொடுக்க கூடியவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் ( இதை இன்னொரு முறை படியுங்கள் )... // இதை தான் இதையே தான் நானும் சொல்கிறேன் ... எங்கு கேட்கிறார்கள் அவர்கள் கண்களுக்கு கருணா , ஜெயா தவிர மற்றவர்கள் தெரிவதில்லை ... திமுக அப்படி செய்தது என்றால் அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா ?? என்கிறார்கள் .. இரண்டும் பணம் தின்னி கழுகுகள் என்று யாவரும் நன்கறிவர் ... இருப்பினும் அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றி போடுவார்கள் ..நேர்மை , மனசாட்சி , தன்மானம் போன்றவை முதலில் இந்த கற்றோர் சபையான தினமலர் வாசகர்களிடமே இல்லை .. அப்பறம் எப்படி மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ???...

அந்த பக்கத்தை பார்க்க

//////////....இது என்னுடைய கருத்து....////////

ஒரு நாடும்  அந்த நாட்டின் அரசும் மக்களுக்கு எது நல்லதோ எது அவசியமோ அதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நாட்டில் இருந்து போதைப்பழக்கத்தை அறவே நீக்கிவிடமுடியாது அது சாத்தியமில்லாத விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியை துவங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இலைறை காய் மறைவாக இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொதுவான விஷயம்போல் ஆக்கியிருப்பதுதான் வேதனைக்குறியதாக இருக்கிறது.

குடியில்லாத சமுதாயம் செய்வோம்.....

8 comments:

  1. தமிழ்நாட்டை வளமாக்க நல்லதொரு இலக்கு.., தொடரட்டும் இச்சேவை..,

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு
    வணக்கம்
    எமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.
    தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  3. கட்டாய ஹெல்மெட், மழைநீர் சேமிப்பு போன்ற நல்ல திட்டங்களோடு கட்டாயம் மது குடிக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் கொண்டு வந்தால் இன்னும் இலக்கை கூட்டி 5௦௦கோடி வரை விற்கலாம்.

    ReplyDelete
  4. பல ஊர்களில் மக்கள் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை இந்த முட்டாள் அரசாங்கம் குடிப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்கிறது வாழ்க ஆட்சி! கூடிய விரைவில் முடிவு 0/40 என்ற முடிவில் கிடைக்கும்.

    ReplyDelete
  5. வாழ்க தமிழ்நாடு! வளர்க குடி மக்கள்!

    ReplyDelete
  6. world bank said
    Government has no business to do business only govern
    but
    புரட்சி தலைவி அரசு சொல்கிறது
    மக்களுக்கான அரசு
    மக்களுக்கு தட்டுபாடின்றி கிடைக்க ஆவண செய்கிறது

    மேலும் வியாபாரம் என்றால் இலக்கு என்று ஒன்று வேண்டும்
    அதுதான் 125 கோடி
    அப்புறம்
    அரசு கஜானா காலியாக இருக்க கூடாது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...