தோற்கும்போதெல்லாம்
தோழனாய் தோளில்
தட்டிக்கொடுத்துக்கொண்டும்...!
நிமிரும் போதெல்லாம்
எதிரியாய் தடைக்கல்லோடு
தள்ளிவிட்டுக்கொண்டும்...!
தேடும் போதெல்லாம்
கண்ணுக்கெட்டாத தூரத்தி
ஒளிந்துக்கொண்டும்...!
விரட்டும்போதெல்லாம்
போகால் நிழல்போல்
ஒட்டிக்கொண்டும்..!
வாழ்க்கை பயணத்தின்
பள்ளமேடுகளை சமன்படுத்தி 
உடன் நடந்துவரும் முரண்...!
காதல்...! 
****************************************
உன்னை 
காக்கவைத்துவிட்டு
சந்திக்க முடியாமல் தவறும்
தருணங்களில்...
நீ வருவதாய் சொல்லி
முடியாமல் போன 
நிமிடங்களில்... 
இருவரிடத்திலும் 
வாடிப்போய் விடுகிறது
காதல்...!
****************************************
மீன் முள்ளாய்
தொண்டையில் 
சிக்கினாலும்...
தூசி துகளாய்
கண்களில் 
உறுத்தினாலும்....
நெருஞ்சி பழமாய்
பாதங்களை 
பதம்பார்த்தாலும்....
முன்னறிவிப்பின்றி
மூளையில் 
முகாமிட்டாலும்....
இதயச்சிறைகளில்
இறங்கிக்கொண்டு 
இம்சித்தாலும்....
என்றென்றும் 
காதல் 
அழகிய இம்சைதான்..!
****************************************
நன்றி..!




அருமையான கவிதை,...
ReplyDeleteநன்றி
Delete