கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தெரிந்துக் கொள்ளுங்கள. Show all posts
Showing posts with label தெரிந்துக் கொள்ளுங்கள. Show all posts

13 July, 2013

உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்?



மனித வாழ்வின் பெரிய துயரம் ஏதுவென்றால் அது இயற்கையை விட்டுப் பிரிந்து, செயற்கையில் மூழ்கி இருப்பதே ஆகும். இயற்கை போட்டுத் தந்த பாதையை விட்டு விலகி செல்ல செல்ல நோய்கள் நம்மை நெருங்கி கொண்டே வரும் அவ்வாறு நேருங்கி வரும் நோய்களை உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம்.

முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும். நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது. 

உடலில் தோன்றும் நோயை உடலைக் கொண்டே தீர்க்கத்தான் உடற்பயிற்சிகள் இந்த பயிற்சிகள் உடலைச் சிற்சில முறைகளில் வளைத்தும், நெளித்தும், முறுக்கியும்,நெகிழ்த்தியும் செய்வதால் உடலில் உள்ள நாளமில்ல சுரப்பிகள் நன்கு சுரக்க ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு தூங்கி எழுந்தவுடன் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சோம்பலை போக்க நெளிப்பு விடுவோம் அப்படி நெளிப்பு விட்டபிறகு ப்ரஸ்சாகி விடுவோம் இப்படி நெளிப்பு விடுவது கூட ஒருவகையான உடற்பயிற்சிதான்.


இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாக வழங்கியிருக்கிறான். அதிகமான உடலுழைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு கஷ்டமான வேலை செய்தாலும் முழு உடலும் வேலை செய்யாது சிலர் கைகளுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள்,

சிலர் கால்களுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள் இப்படி ஒரே உறுப்புக்கு அதிகமான வேலைப் பளு கொடுப்பதால் ஏற்படுகின்ற தீமைகளில் இருந்து உடற்பயிற்சி நம்மை பாதுகாக்கும்.

29 May, 2013

இந்த எண்களில் இந்தியா முழுக்க இலவசமாக பேசலாம்...


இந்தியா முழுக்க இலவசமாக பேசக்கூடிய Toll Free  எண்கள் ...

 Airlines
Indian Airlines – (1800 180 1407)
Jet Airways – (1800 22 5522)
Spice Jet – (1800 180 3333)
Air India — (1800 22 7722)
Kingfisher – (1800 180 0101)


Banks

ABN AMRO – (1800 11 2224)
Canara Bank – (1800 44 6000)
Citibank – (1800 44 2265)
Corporation Bank – (1800 443 555)
Development Credit Bank – (1800 22 5769)
HDFC Bank – (1800 227 227)
ICICI Bank – (1800 333 499)
ICICI Bank NRI – (1800 22 4848)
IDBI Bank – (1800 11 6999)
Indian Bank – (1800 425 1400)
ING Vysya – (1800 44 9900)
Kotak Mahindra Bank – (1800 22 6022)
Lord Krishna Bank – (1800 11 2300)
Punjab National Bank – (1800 122 222)
State Bank of India – (1800 44 1955)
Syndicate Bank – (1800 44 6655)
Automobiles

Mahindra Scorpio – (1800 22 6006)
Maruti – (1800 111 515)
Tata Motors – (1800 22 5552)
Windshield Experts – (1800 11 3636)


Computers/IT

Adrenalin – (1800 444 445)
AMD – (1800 425 6664)
Apple Computers – (1800 444 683)
Canon – (1800 333 366)
Cisco Systems – (1800 221 777)
Compaq – HP – (1800 444 999)
Data One Broadband – (1800 424 1800)
Dell – (1800 444 026)
Epson – (1800 44 0011)
eSys – (3970 0011)
Genesis Tally Academy – (1800 444 888)
HCL – (1800 180 8080)
IBM – (1800 443 333)
Lexmark – (1800 22 4477)
Marshal’s Point – (1800 33 4488)
Microsoft – (1800 111 100)
Microsoft Virus Update – (1901 333 334)
Seagate – (1 800 425 4535)
Symantec – (1800 44 5533)
TVS Electronics – (1800 444 566)
WeP Peripherals – (1800 44 6446)
Wipro – (1800 333 312)
Xerox – (1800 180 1225)
Zenith – (1800 222 004)

Indian Railway
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
Couriers/Packers & Movers

ABT Courier – (1800 44 8585)
AFL Wizz – (1800 22 9696)
Agarwal Packers & Movers – (1800 11 4321)
Associated Packers P Ltd – (1800 21 4560)
DHL – (1800 111 345)FedEx – (1800 22 6161)
Goel Packers & Movers – (1800 11 3456)
UPS – (1800 22 7171)
Home Appliances

Aiwa/Sony – (1800 11 1188)
Anchor Switches – (1800 22 7979)
Blue Star – (1800 22 2200)
Bose Audio – (1800 11 2673)
Bru Coffee Vending Machines – (1800 44 7171)
Daikin Air Conditioners – (1800 444 222)
DishTV – (1800 12 3474)
Faber Chimneys – (1800 21 4595)
Godrej – (1800 22 5511)
Grundfos Pumps – (1800 33 4555)
LG – (1901 180 9999)
Philips – (1800 22 4422)
Samsung – (1800 113 444)
Sanyo – (1800 11 0101)
Voltas – (1800 33 4546)
WorldSpace Satellite Radio – (1800 44 5432)
Travel
Club Mahindra Holidays – (1800 33 4539)
Cox & Kings – (1800 22 1235)
God TV Tours – (1800 442 777)
Kerala Tourism – (1800 444 747)
Kumarakom Lake Resort – (1800 44 5030
Raj Travels & Tours – (1800 22 9900)
Sita Tours – (1800 111 911)
SOTC Tours – (1800 22 3344)
Healthcare

Best on Health – (1800 11 8899)
Dr Batras – (1800 11 6767)
GlaxoSmithKline – (1800 22 8797)
Johnson & Johnson – (1800 22 8111)
Kaya Skin Clinic – (1800 22 5292)
LifeCell – (1800 44 5323)
Manmar Technologies – (1800 33 4420)
Pfizer – (1800 442 442)
Roche Accu-Chek – (1800 11 4546)
Rudraksha – (1800 21 4708)
Varilux Lenses – (1800 44 8383)
VLCC – (1800 33 1262)
Hotel Reservations

GRT Grand – (1800 44 5500)
InterContinental Hotels Group – (1800 111 000
Marriott – (1800 22 0044)
Sarovar Park Plaza – (1800 111 222)
Taj Holidays – (1800 111 825)
Teleshopping

Asian Sky Shop – (1800 22 1800)
Jaipan Teleshoppe – (1800 11 5225)
Tele Brands – (1800 11 8000)
VMI Teleshopping – (1800 447 777)
WWS Teleshopping – (1800 220 777)

Others

Domino’s Pizza – (1800 111 123)
Cell Phones

BenQ – (1800 22 08 08)
Bird CellPhones – (1800 11 7700)
Motorola Moto Assist – (1800 11 1211)
Nokia – (3030 3838)
Sony Ericsson – (3901 1111)
இதில் இல்லாத தங்களுக்கு தெரிந்த, அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எண்களை தந்தால் இதில் இணைத்துவிடுகிறேன்.
நன்றி...
(முகநூலில் இருந்து தொகுக்கப்பட்டது)

21 March, 2013

அட இதுக்குக்கூடவா வரி கட்டணும்...! தெரிஞ்சிக்கங்க மக்களே...!



நாம் பெறும் அன்பளிப்புக்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம், புதிதாக வந்திருக்கும் வருமான வரி சட்டம் யு/எஸ் 52 (2)ன் படி, நமது வருமானத்தைத் தவிர்த்து வேறு வழிகள் மூலமாக வரும் வருமானங்களுக்கும் நாம் வரி கட்ட வேண்டும். இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி ரூ.50,000க்கு அதிகமாக பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பாகப் பெற்றால் அந்த அன்பளிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.

அது அசையா சொத்தாகவோ அல்லது அசையும் சொத்தாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு ரூ.50,000க்கு அதிகமாக இருந்தால் புதிய சட்டத்தின் படி அதற்கு வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு பெறும் அன்பளிப்புகள்:

1. திருமணத்தின் போது பெறும் அன்பளிப்புகள்
2. உயில் மூலம் பெறப்படும் பூர்வீக சொத்துகள்
3. ஒரு வேளை அன்பளிப்பு வாங்கியவர் இறந்துவிட்டால்
4. இறந்த தொழிலாளியின் போனஸ், ஓய்வூதியம் மற்றும் முதிர்வுத் தொகை
5. என்ஆர்ஐ கணக்கு மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு

அதுபோல் ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் மருமகன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:

எடுத்துக்காட்டு 1

ஹரி என்பவர் தனது திருமணத்தின் போது தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து ரூ.50,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை. அதே போல் அவர் அசையும் மற்றும் அசையா பூர்வீக சொத்துக்களைப் பெற்றாலும் அதற்கு அவர் வரி செலுத்தத் தேவையில்லை.

எடுத்துக்காட்டு 2

ரூ.10 லட்சம் மதிப்பில் ஹரி தனது மனைவி தீபாவிற்காக ஒரு அன்பளிப்பு வாங்கிக் கொடுத்தால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை.

எடுத்துக்காட்டு 3

ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது வருங்கால மனைவி தீபாவிற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை அன்பளிப்பாக வழங்கினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 4

ராகுல் என்பவர் ஹரி என்பவருக்கு ரூ.30,000 ரொக்க பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதே நிதி ஆண்டில் ராகுல் மேலும் ரூ.21,000ஐ ஹரிக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். தற்போது அந்த ஆண்டு முழுவதும் ராகுலிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற ரூ.51,000க்கும் ஹிர வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்த வேண்டிய உறவினர்கள்:

1. வரி செலுத்த வேண்டியவரின் வாழ்க்கைத் துணைவர்
2. வரி செலுத்த வேண்டியவரின் சகோதரர் அல்லது சகோதரி
3. வாழ்க்கைத் துணைவரின் சகோதரர் அல்லது சகோதரி
4. வரி செலுத்த வேண்டியவரின் பெற்றோர்களின் சகோதரர் அல்லது சகோதரி
5. வரி செலுத்த வேண்டியவரின் வாரிசு அல்லது மூதாதையர்
6. வாழ்க்கைத் துணைவரின் வாரிசு அல்லது மூதாதையர்

23 February, 2013

இந்த காயகல்பத்தை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க...!


கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்... தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

பகலுணவில் 1-பிடி சாதத்துடன் 1-ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 


சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1-கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும். நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 

கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.

காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்றகண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(நன்றி ஹெல்த் நியூஸ்)

23 December, 2012

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது. 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் டெண்டுல்கர், 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. 

இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை சச்சினுக்கு உண்டு.




Sachin Tendulkar


Full name Sachin Ramesh Tendulkar


Born April 24, 1973, Bombay (now Mumbai), Maharashtra

Current age 39 years 243 days

Major teams India, Asia XI, Mumbai, Mumbai Indians, Yorkshire

Nickname Tendlya, Little Master

Playing role Top-order batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm offbreak, Legbreak googly

Height 5 ft 5 in

Education Sharadashram Vidyamandir School

Sachin Ramesh Tendulkar
Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 194 320 32 15645 248* 54.32

51 66
67 114 0
ODIs 463 452 41 18426 200* 44.83 21367 86.23 49 96 2016 195 140 0
T20Is 1 1 0 10 10 10.00 12 83.33 0 0 2 0 1 0
First-class 299 474 48 24701 248* 57.98

79 112

184 0
List A 551 538 55 21999 200* 45.54

60 114

175 0
Twenty20 77 77 10 2440 100* 36.41 2008 121.51 1 15 313 31 24 0
Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
Tests 194 141 4186 2459 45 3/10 3/14 54.64 3.52 93.0 0 0 0
ODIs 463 270 8054 6850 154 5/32 5/32 44.48 5.10 52.2 4 2 0
T20Is 1 1 15 12 1 1/12 1/12 12.00 4.80 15.0 0 0 0
First-class 299
7551 4351 70 3/10
62.15 3.45 107.8
0 0
List A 551
10230 8478 201 5/32 5/32 42.17 4.97 50.8 4 2 0
Twenty20 77 8 93 123 2 1/12 1/12 61.50 7.93 46.5 0 0 0

11 August, 2011

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...!



எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை. வெள்ளையர்களிடமிருந்து கஷ்டப்பட்டு சுதந்திரம் அடைந்துவிட்டது நமது நாடு. ஆனால் இன்னும் ஊழல் கொள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை...

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற்றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட்டின் விவிஐபிக்களை சிறையில் தள்ளியுள்ளது.

 முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம். அதன் பிறகு நடந்தேறிய சம்பங்கள் உலகம் அறிந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் பதவி விலகிய ஆ.ராசா, அவரது உதவியாளர் சண்டோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பால்வா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

லேட்டஸ்டாக தயாநிதி மாறனின் பதவியையும் இந்த 2ஜி ஊழல் பறித்ததது.

2. போலி முத்திரைத்தாள் மோசடி
அப்துல் கரீம் தெல்கி என்பவர் நாசிக்கில் பணம் மற்றும் முத்திரைத்தாள் அடிக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களை கையில் வைத்துக் கொண்டு போலியாக முத்திரைத்தாள் தயாரித்து அதை அரசு நிறுவனங்களுக்கே விற்பனையும் செய்து நாட்டையே அதிர வைத்தார்.

சுமார் 12 மாநிலங்களில் ரூ. 43,000 கோடிக்கு முத்திரைத்தாள் விற்கப்பட்ட தகவல் வெளியாகி அனைவரையும் அயர வைத்தார் தெல்கி.

இந்த வழக்கில் தெல்கிக்கு ரூ. 100 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

3. டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்

2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு நிலவிய மெகா மற்றும் மகா குழப்பங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலக அளவில் நம்மைப் பார்த்து பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு போட்டிக்கான ஏற்பாடுகளை முடிப்பதில் பெரும் காலதாமதம் செய்தனர்.

புத்தம் புதிதாக கட்டிய பாலம் உடைந்தது. சர்வேதச வீரர்களுக்காக கட்டிய குடியிருப்புகள் தங்கும் நிலையில் இல்லாமல் போனது. அறைகளுக்குள் பாம்பு வந்தது. உணவு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்தியர்களை தலை குனிய வைத்து விட்டது.

பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின என்றாலும், சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவினரும் செய்த மிகப் பெரிய ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்தது.

காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இதில் ரூ. 6,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இதைவிட 10 பத்து மடங்கு அதிகம் என்கிறார்கள்.

இந்த போட்டிகளை நடத்தியதால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

4. சத்யம் மோசடி

சத்யம் நிறுவன மோசடி தான் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியாகும். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ. 14,000 கோடியை சுருட்டி விட்டு, அதை ஹாயாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

தனது நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்களை வைத்துக் கொண்டு 53 ஆயிரம் பேர் பணி புரிவதாக பொய்க் கணக்கு காண்பித்தார். நிறுவனத்தின் வருவாயையும் பொய்யாகவே காண்பித்து வந்தார்.

சத்யம் நிறுவனமும் இப்போது மகிந்திரா நிறுவனத்திடம் போய் விட்டது. டெக் மகிந்திராவாக புது அவதாரத்துடன் அது நடை போட்டு வருகிறது.

5. பெல்லாரி சுரங்க மோசடி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் சுரங்கப் பணிகளுக்கு பெயர் போனது. தற்போது அது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது.

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோதா சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அவர் தவிர குமாரசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த சட்டவிரோத தொழிலில் உள்ள தொடர்புகளை லோக் ஆயுக்தா புட்டுப் புட்டு
வைத்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் புயலையும், பாஜகவில் பெரும் ஓட்டையையும் போட்டு விட்ட இந்த ஊழல் புகாரில் சிக்கிய எதியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

6. மாட்டுத்தீவன ஊழல்

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

7. ஆதர்ஷ் ஊழல்

மும்பையில் கார்கில் போரில் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆதர்ஷ். 6 அடுக்கு மாடியாக கட்டத் திட்டமிட்டு இறுதியில் 31 மாடி கட்டிடமானது. இதில் விந்தை என்னவென்றால் இந்த குடியிருப்பில் 40 சதவீத வீடுகள் ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதுமில்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 95 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

8. போபர்ஸ் ஊழல்

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1,500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார்.

இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும், இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தொழில் அதிபர் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். இநத நிமிடம் வரை குவாத்ரோச்சியின் நிழலைக் கூட தொட முடியவில்லை சிபிஐயால். கடைசியில் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்தே விடுவிக்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டு விட்டது.

9. யூடிஐ மோசடி

யூடிஐ மோசடியில் முன்னாள் யூடிஐ சேர்மன் பி.எஸ். சுப்பிரமணியம் மற்றும் 2 செயற்குழு தலைவர்கள் எம்.எம். கபூர், எஸ்.கே. பாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யூடிஐ கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து சிறிது காலத்திற்கு சைபர்ஸ்பேஸின் 40 ஆயிரம் பங்குகளை ரூ. 3.33 கோடி கொடுத்து ராகேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கியது. அந்த பங்குகளுக்கு கிராக்கி இல்லாத பொழுது வேண்டும் என்றே அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அந்த 4 பேரின் சதியால் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்தது. சைபர்ஸ்பேஸ் பங்குள் விற்பனையை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர்ஸ்பேஸ் இன்போசிஸ் விளம்பரதாரரான அரவிந்த் ஜோஹாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசடி செய்ததற்காக அவருக்கு நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.18 கோடி கிடைத்துள்ளது.

10. ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா. அவர் கடந்த 1992-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீர் என்று உயரக் காரணமானவர். அவர் வங்கித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளில் கடன் வாங்கி பல்வேறு பிரிவுகளின் பங்குகளை வாங்கிக் குவித்து அவற்றின் விலையேற்றத்தி்ற்கு காரணமானார்.

அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, முதலீட்டாளர்களைக் கவர்ந்தார். அவரது சதித் தி்ட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர் மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. (நன்றி தட்ஸ்தமிழ்)

இந்நிலையில் மேத்தா கடந்த 2002-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

"முத்திரை ஊழல்"

இந்த பத்து ஊழல்களெல்லாம் நாட்டின் பல்வேறு சமுதாயத்தினர் செய்த ஊழல்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்குச் சாதகமாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்பட்ட பணம்தான்.

2008ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது திடீரென பாஜக எம்.பி அசோக் அர்கால் உள்ளிட்ட மூன்று எம்.பிக்கள் பெரிய பெரிய பைகளில் பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. பெருமை மிகுந்த லோக்சபாவில் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய எம்.பிக்களால் நாடே அன்று வெட்கித் தலை குணிந்தது.

மற்ற ஊழல்களுக்கு சற்றும் குறையாதது இந்த எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் என்பதில் சந்தேகமில்லை. 

படிப்பதற்க்கே தலைசுற்றுகிறதே இவ்வளவும் தெரிந்துக்கொண்டு நாம் சும்மாதான் இருக்கிறோம். ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகலால் நம் இந்திய மானம் கப்பலேறுகிறது. இந்த ஊழல் ஒழிந்து நாடு என்று நல்ல நிலைக்கு நிறும்பும் என்ற ஏக்கத்தோடே கொண்டாட வேண்டியிருக்கிறது ஒல்வோறு சுதந்தரத்தையும்.....

ஜெய்ஹிந்த்...

18 July, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை.. (தொடர் பதிவு)


1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?
  • இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
  • எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
  • மற்றும் அம்மா.. அம்மா... அம்மா...

2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்
  • தன்மானத்தை தாரை வார்த்து இந்த பூமியில் வாழ்வது...
  • சாலை விதிகளை மதிக்காதவர்களை சும்மா விடுவது.. (இது பிறர் உயிரோடு விளையாடும் விஷயம்...)
  • முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...

3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்
  • எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
  • உயிர்களை மிரட்டும் இயற்கை சீற்றங்கள்...
  • அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்....

4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
  • கமலின் அன்பே சிவம்...
  • ரஜினியின் பாட்ஷா...
  • அஜீத்தின் முகவரி...

5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
  • ஒவ்வொறு பூக்களுமே.... (ஆட்‌டோகிராப்)
  • காதல் காயங்களே.... (இரட்டைக்குழல் துப்பாக்கி...)
  • கடவுள் தந்த அழகிய வீடு.... (மாயாவி)

6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
  • தயிர்ஊற்றிய பழைய கஞ்சி...
  • சாம்பார் சாதம்...
  • ஞாயிறு மட்டும் மட்டன் பிரியாணி...

7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?
  • கிள்ளி, கீறி, வெட்டி, அடித்து, ஒடித்து, நொறுக்கி, செதுக்கி என்னை சிற்பமாக்கும் இந்த சமூகம்...
  • முடிந்த வரை நான் க‌டைபிடிக்கும் உண்மை...
  • என் நியாயமான கோவங்கள்...

8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?
  • யாருடனாவது சண்டையிட்டபின்  அதை மறந்து விட...
  • சுந்தரத் தெலுங்கு...
  • விதியை வெல்லும் வழி...

9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?
  • தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
  • அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
  • குழந்தையின் அழுகுரல்....


10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று காரியங்கள்...?
  • நான் ஆற்றிவரும் கல்விப் பணி...
  • பிளாக் எழுதுவது.... உலகத்தமிழர்களிடம் கிடைத்த அறிமுகம் (பதிவுலகம் மூலமாக)
  • என் கவிதைகள்....

11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?
  • கடவுள் யார் என்பது...
  • ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
  • காதல்... காதல்... காதல்...

12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?
  • நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
  • தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
  • இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும்...

13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
  • 10-ஆம் வகுப்பில் எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்த சகமாணவன் காட்டையன் (இவர் ஒரு இருளர் இன மாணவர்.. தற்போது எங்கிருக்கிறார்  என்று தெரியவில்லை...)
  • எனக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்கும் திரு. பூரிவாக்கம் ர‌மேஷ்
  • பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய வேடந்தாங்கல் கருண்...

14) என் தளத்தில் எனக்கு பிடித்த மூன்று பதிவுகள்...?

15) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?

யாரை கூப்பிடலாம்...

 (யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறட்டும்)




இந்த தகவல்கள் ஏதோ என்னையும் என் நடைத்தையும் பிரபலப்படுத்தவோ அல்லது என்னுடைய வாழ்க்கையை நியாப்படுத்தவோ அல்ல... மனதின் இடுக்குகளில் புழுங்கியவைகள் தற்போது பதிவாய் மிளிர்கிறது.

நன்றி என்னை அழைத்த  நுனிபுல் ரியாஸ் அஹமது
Related Posts Plugin for WordPress, Blogger...