கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 March, 2018

சமுத்திரக்கனியின் வில்லத்தனமும்... மனைவியின் கோவமும்...


சினிமா எனும் கனவுத்தொழிற்சாலையில் இந்த நூறாண்டுகால வரலாற்றில் நடிப்பில் ஞானசூன்யன்கள் முதல் ஜாம்பவான்கள் வரை என  இதுவரை ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள்... காலங்களுக்கு ஏற்பவும்.. கதைகளுக்கு ஏற்பவும் அந்தந்த காலக்கட்டத்தில் சினிமாவில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஏராளம்... ஏராளம்...

ஒவ்வொரு நடிகை, நடிகர்களுக்கும் நடிப்பில் தனக்கென தனிபாணியை கொண்டிருப்பார்கள்.. அவர்களுடைய நடிப்பு, அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தனித்தன்மைகள் என அத்தனை நடிகர்களும் தன்னுடைய முத்திரையை பதித்து மக்களால் போற்றப்பட்டவர்களே.... ரசிகர்களிடம் தன்னை தனித்துக்காட்ட படத்துக்கு படம் தன்னை மெருகேற்றி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி மக்கள் மனதிலே நிலையான இடத்தை பிடித்துவிடுகிறார்கள்...

தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு இன்றைய தத்தக்காபித்தக்கா வரை என்னற்ற ஹீரோக்கள் வரிசையை எடுத்துக்கொண்டாலும் சரி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன்,  ரகுவரன், மன்சூர்அலிகான், பிரகாஷ்ராஜ் என வில்லன்கள் பட்டியலை எடுத்துகொண்டாலும் சரி, திரையில் வந்துப்போன அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் சரி ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் அவர்களை கொண்டாடியிருக்கிறார்கள்.

ஹீரோக்களை கொண்டாடும் அதே காலக்கட்டத்தில் வில்லன்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். நம்பியாரை திரையில் காட்டும் வில்லத்தனத்தின் உச்சம் என்பது அவரை எம்ஜிஆரின் உண்மையான எதிரி என்றே நம்பிய கூட்டங்கள் கூட இருந்தது... அவருடைய வில்லத்தனம், அவருடைய நடிப்பு, அவருடைய தனித்தன்மை இன்றளவும் போற்றப்படுகிறது.

என் நண்பர் ஒருவர் ரகுவரனுக்கு அவ்வளவு பெரிய ரசிகர்... அவருடைய படங்களை பார்த்து அப்படி கொண்டாடுவார்... ஆனந்தராஜ், மன்சூர்அலிகான் ஒரு காலக்கட்டத்தில் சினிமாவை கலக்கியிருக்கிறார்கள்... இப்படியாய் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் வந்து இன்றளவும் தமி‌ழ்திரைவுலகை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
..


சரி சௌந்தர்... என்ன சொல்ல வர... என்று தங்களுடைய மனதில் ஓடும் கேள்வி எனக்கு கேட்கிறது... பொதுவாக அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை அடுத்தப்படத்தில் நாம் அப்படியே பார்க்க விரும்புவோம்.. எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்தால் எப்படி ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ அதேபோல்தான் நம்பியாரை ஹீரோவாக மக்கள் விரும்பவில்லை...

ஜெமினி கணேசனை காதலுக்காகவே பார்த்தவர்கள் அவர் வீரவசம் பேசி சண்டையிட்டால் மனதில் சிரித்துக்கொண்டார்கள்.... அடுத்த காலக்கட்டத்தில் கமல் நடிப்புக்கு எனவும், ரஜினியை ஸடடைலுக்கு எனவும் ஒரு முத்திரை பதிந்துவிட்டது... ரசிகர்கள் ஹீரோக்களை ஹீரோவாகவும்... வில்லன்கள் வில்லன்களாகவும்.. மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள்...

ஆனால் அது டிஜிட்டல் சினிமாவுக்கு பொருந்தவில்லை.. ஹீரோ வில்லனாகவும்.. நகைச்சுவை நடிகராகவும்.. வில்லன்கள் ஹீரோவாகவும் எல்லாருக்கும் நடிப்பில் எதையும் நடித்துக்காட்டுவோம் என்று நிருபித்த காலக்கட்டமாக இருக்கிறது...

சமீபத்தில் என்னுடைய மனைவி சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமுத்திரகனி வில்லனாகவும் நடித்த “பாயும் புலி“ படத்தை பார்த்துகொண்டிருந்தாள்.. பாதிபடம் முடிந்த நிலையில் ஏங்க.. என்று குரல்... என்னாச்சிம்மா என்று கேட்டேன்... என்னங்க இப்படி எடுத்திருக்காங்க... அப்படின்னு கேள்விக்கேட்டாள்...

என்னம்மா சுசீந்திரன் நல்லா பண்ணியிருப்பாரே... விஷால், சமுத்திரகனியும் நல்லா நடிச்சிருப்பாங்களே... எனக்கே பிடிச்சிருக்கு உனக்கு என் பிரச்சனை என்று கேட்டேன்... (எங்க வீட்டம்மா தெலுங்குவாடு... 10 தமிழ் படம் பார்த்தா 20 தெலுங்குபடம் பார்த்திருவாங்க..) எப்பவும் தமிழ்படத்தை பார்த்து கேள்விகேட்டது கிடையாது... ஏன் இப்படி கேட்குறாங்களேன்னு... மறுபடியும் சொல்லும்மான்னு கேட்டேன்...

இந்த படத்துல சமுத்திரக்கனி வில்லனாக வற்ராருங்க.. ஆமா.. அவர்தான் இந்தப்படத்தில் வில்லன்... ஏங்க என்னங்க சொல்றீங்க எவ்வளவு நல்லவர் அவர் ஏங்க இப்படியெல்லாம் நடிக்கிறாரு... அவர் வில்லானக நடிக்கிறத என்னால பார்க்க முடியலைங்க...அப்படின்னு ஒரே புலம்பல்...



ஒரு நடிகர் என்பவன் தனக்கு கொடுத்திருக்கிற வேடத்தில் தன்னுடைய திறமையை பயன்படுத்தி சிறப்பாக நடிச்சிக்கொடுப்பாங்க... அதன்படி இந்த படத்துக்கு அவர் நல்லாயிருக்கும்ன்னு அந்தப்படத்தில் வில்லனாக போட்டிருக்காங்க... அப்படின்னு பெரிய விளக்கம்கொடுத்தும் எங்கவீட்டம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. கடைசியிலே அந்தப்படத்தை முழுமையாக பார்க்கவேயில்லை... (நல்லவேளை அவங்க இன்னும் ரஜினிமுருகன் படத்தை பார்க்கல)

சமுத்திரக்கனி என்று சொன்னவுடன் ஒரே அறிவுரை என்றுதான் நினைவுக்கு வரும்... (இந்த சாட்டை, அப்பா போன்ற படங்களை இந்த விஜய் டிவி காரனுங்க மாதத்துக்கு 10 வாட்டி போட்டு அவர் இப்படித்தான் என்பதுபோல் மக்கள் மனதில் பதிந்துவிட்டார்போல) எல்லாப்படத்திலும் அவர் அதே பாணியை கொண்டு நடிப்பதால் சிலருக்கு சலிப்புகூட ஏற்பட்டிருக்கிறது...

அவர் வில்லனாக நடிப்பதை பலரும் பாராட்டியும் இருக்கிறார்கள்... ஆனால் என் மனைவியோ அவர் நல்லவனாகவே மட்டும்தான் நடிக்கனும்... அவர் வில்லனாக நடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல என்று கடைசிவரை விவாதம் செய்துக்கொண்டே இருக்கிறார்...

எதுஎப்படியோ ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும்.. அவர் இந்த கதாபாத்திரத்துக்குதான் பொறுந்தவார்... அப்படின்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்கிறது என்று நம்பத்தோன்றுகிறது....

2 comments:

  1. எதுஎப்படியோ ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும்.. அவர் இந்த கதாபாத்திரத்துக்குதான் பொறுந்தவார்... அப்படின்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்கிறது என்று நம்பத்தோன்றுகிறது....

    ReplyDelete
  2. சிலரது மனதில் பதிந்து போன தோற்றம் மாறாது என்பதற்கு தங்கள் மனைவி உதாரணம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...