கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 March, 2018

இப்படியும் கணவன் மனைவி...


கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?" 


மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."



கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“ 

மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க? 

கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“



மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா? 

கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“ 

மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“


மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா? 

கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!



கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ? 

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!



கணவன் : “உனக்குத்தான் 

2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?” 

மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”



மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க 

கணவன் : ஒண்ணுமில்ல! 

மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


5 comments:

  1. அடி பலம்தான் போல!

    ReplyDelete
    Replies
    1. ரொமுப பெரிசுன்னும் சொல்லமுடியாது...

      அதே சமயம் சின்னதுன்னும் சொல்ல முடியாது....

      Delete
  2. தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in

    ReplyDelete
  3. எல்லா சிரிப்'பூ'க்களையும் படித்து மகிழ்ந்தேன்.

    என்னதான் இப்படிப்பட்ட கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் வாரிவிடும் ஜோக்குகள் வந்தாலும், இருவருகுள்ளும் இருக்கும் பரஸ்பர அன்பு என்றும் மாறது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...