கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 December, 2012

யாவரும் சந்திக்கும்... இராத்திரி நேரத்து இம்சைகள்...



ண்ணீரால் நனைந்த 
ஈரத்தோடு வந்தது
சகோதரியின் கடிதம்...

“தயவுசெய்து செய்வதாய் சொன்ன 
சீரை சீக்கிறம் செய்து விடுங்கள்..”


நிலை அறிந்தும் 
கேட்பதை விட வேறு வழியில்லையென
கேட்டே விடுகிறான் சகோதரன்...

“தேர்வுக்கட்டணம் செலுத்த 
இந்த வாரம்தான் இறுதி”


யங்கியும் தவிப்போடும் 
தாயுள்ளம் விண்ணப்பம் வைக்கிறது..

“நேற்றோடு மாத்திரைகள் 
தீர்ந்துப்போனது..”

ந்த நாள் முதல் 
எனக்கு ஏதுவுவே செய்வதில்லை 
கண்னை கசக்கிகொண்டு மனைவி சொல்கிறாள்...

“உங்க வீட்டார்க்கே 
‌எல்லாத்தையும் செய்றீங்க”

கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
விம்பிக் கொண்டிருக்கும் என்னை 
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது இரவு...
ன் கண்ணீரை
யாருக்கும் காட்டாமல்...


இந்த கவிதை உங்களை பாதித்திருந்தால் 
அந்த பாதிப்பை இங்கே பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்..

-மீள் பதிவு-


11 comments:

  1. மனது வலித்தாலும் உண்மை இதுதான், மத்தியதர குடும்பத்தின் நிதர்சனமுகம். எத்தனையோ பேர்கள் குடும்ப சுமைதாங்கியாய் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்... அருமை நண்பா...

    ReplyDelete
  2. மனம் கனக்கும் பதிவுகள்...

    ReplyDelete
  3. ஏழ்மையின் இம்சையை சொல்லியுள்ள விதம் அருமை!

    ReplyDelete
  4. நிதர்னமான உண்மை. வலிக்கவே செய்கிறது.

    ReplyDelete
  5. படிப்பவர்கள் அனைவரையும் நிச்சயம்
    பாதிக்கும் கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வலியான உண்மைகள்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. இனிமே உங்களுக்கு என்னகவல இருக்கு எல்லாம் தீர்ந்து போகும்

    ReplyDelete
  8. இதிலிருந்து தப்பவே முடியாது எல்லோருக்கும் இதுபோல பிரச்னை இருக்கும்

    ReplyDelete
  9. யதார்த்தமான உண்மை செளந்தர்.
    ஒரு பொறுப்புள்ள சாராசரி மனிதனின் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமே.

    ReplyDelete
  10. இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...